சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது
சென்னை: ராஜபக்சே கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சென்னைக்கு வருவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம நடத்தினர். ஆனால் அவர்களது போராட்டத்திற்கு முன்பே ஜெயசூர்யா ரகசியமாக சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்.
இந்தக் குழப்பம் காரணமாக விமானம் மூலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி குழப்பமாகி விட்டது.
போராட்டம் குறித்து முன்பே அறிந்திருந்த ஜெயசூர்யா மிகவும் ரகசியமான முறையில் சென்னைக்குள் நுழைந்து விட்டார். நேற்று காலையிலேயே கொழும்பிலிருநது நேரடியாக சென்னைக்கு வந்த அவர் படு ரகசியமான முறையில் விமான நிலையத்தைத விட்டு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்.
அதை அறியாத புதிய தமிழகம் கட்சியினர் விமான நிலையத்தில் கூடி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியினர் அங்கு வந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் குறுக்கிட்டு கருப்புக் கொடி காட்டிய 18 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ஜெயசூர்யா, இனவெறி பிடித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர். அவரது கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்கக் கூடாது. இனவெறிப் படுகொலைக்குத் துணை போகும் நபராகவே பார்க்க வேண்டும் என்றார்.
இன்று சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை அணியில் ஜெயசூர்யா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications