ஆயிஷாவிடம் 2 மணி நேரம் ஹைதராபாத் போலீஸார் விசாரணை
ஹைதராபாத்: சோயப் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஹைதராபாத் பெண் ஆயிஷா சித்திக்கியிடம் ஹைதராபாத் போலீஸார் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சோயப் மாலிக் என்னைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இப்போது சானியாவை கல்யாணம் செய்ய முயல்கிறார். எனக்கு டைவர்ஸ் கொடுத்து விட்டு அவர் கல்யாணம் செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஆயிஷா. இதுதொடர்பான ஆதாரங்களையும் ஆயிஷா தரப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து தற்போது ஹைதராபாத் வந்து சானியா வீட்டில் தங்கியுள்ள சோயப் மாலிக்கிடம் போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று ஆயிஷாவிடம் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்த்து. இந்த விசாரணையின்போது சோயப் மாலிக் மீதான புகார்களுக்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரித்தறிந்தனர்.
டென்ஷனைக் குறைக்க விருந்துக்குப் போன சானியா- சோயப்
இதற்கிடையே, ஆயிஷா சித்திக்கி எழுப்பியுள்ள பிரச்சினையால் பெரும் டென்ஷனில் உள்ள சானியா மிர்ஸாவும், சோயப் மாலிக்கும், அதைக் குறைக்கும் இரவு விருந்து சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றனர்.
திங்கள்கிழமை சானியாவும், சோயப்பும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அன்று இரவு, சானியா, சோயப் மாலிக் ஆகியோர் ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டனர். அவர்களுடன் சானியாவின் தங்கை அனம், இன்னொரு உறவினர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனராம்.












Click it and Unblock the Notifications