தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏப்ரல் 16ல் தர்ணா போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சமூகநலத் துறையின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 28 ஆண்டுகளாக பணி நிரந்தரம், மற்றும் பதவி உயர்வு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
பணி நிரந்தரம், பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications