டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் கூட்டம்- ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மாலை அனைத்து மாநில முதல்வர்கள மாநாடு தொடங்கியது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இக்கூட்டத்தில், விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்கிறார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, 10 பெரிய மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய மையக்குழுவை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார்.
இக்குழுவில், தமிழ்நாடு, ஆந்திரா அசாம், பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சரத்பவார், திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவின் கூட்டம்தான் இன்று நடக்கிறது.












Click it and Unblock the Notifications