சென்னை – அரைகுறை பாலத்திலிருந்து பறந்து ரயில்வே டிராக்கில் விழுந்த கார்!
சென்னை: அரைகுறையாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது சென்ற கார், 50 அடி உயரத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.
சென்னை, பல்லாவரம் பழைய ஜிஎஸ்டி சாலையில் இருந்து பழைய பல்லாவரம் செல்வதற்காக, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சாலையை ஒட்டியுள்ள மேம்பால பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையும், தண்டவாளத்தின் மேலை வரக்கூடிய பகுதியை ரயில்வே துறையும் கட்டுவதாக ஒப்பந்தம்.
நெடுஞ்சாலைத்துறை தனது பங்கு வேலைகளை முடித்துவிட்டது. ரயில்வே தனது பணிகளை இன்னும் துவக்கவில்லை.
அதாவது, தண்டவாளத்தின் இரண்டு பக்கதில் இருந்தும் மேம்பால பாதை எழுப்பப்பட்டு விட்டது. ஆனால், தண்டவாளத்தின் மத்தியில் இரண்டு பாதையும் இணைக்கப்படாமல் உள்ளது.
பாலம் அரைகுறையாக பாதியில் நிற்பது பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தெரியும். பாலத்திற்காக போடப்பட்ட சாலையில் இருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பில்லை.
தினசரி அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இந்த நிலவரம் தெரியும்.
ஆனால், நிலைமை தெரியாத வாகனஓட்டிகளை கவனத்தில் கொண்டு இந்தப்பாதை முற்றிலும் மூடப்பட்டிருக்க வேண்டும். அல்லது எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் நிர்வாகத்தினர் செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி சாலையில் இருந்து பழைய பல்லாவரத்துக்கு செல்ல திட்டமிட்டு, இந்த பாலத்தில் ஏறிய கார் ஒன்று தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த திவாகர் என்ற 30 வயது இளைஞர் இந்த காரை ஓட்டி வந்துள்ளார். பாலம் அரைகுறையாக நிற்பது அவருக்கு தெரியவில்லை.
வேல்ஸ் கல்லூரிக்கச் செல்வதற்காக படு வேகமாக காரை ஓட்டிச் சென்ற அவர் பாலத்தின் நடுப்பகுதி அருகே சென்ற போது தான், பாலம் பாதியில் நிற்பதை பார்த்தார். அதிர்ச்சி அடைந்த திவாகர் திடீர் பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சி செய்தார்.
அதற்குள் 50 அடி உயர பாலத்தில் இருந்து கார், சினிமாவில் வருவதை போல பறந்து வந்து தண்டவாளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்து நொறுங்கியது. காரின் உள்ளே சிக்கிக்கொண்ட திவாகர் உயிருக்கு போராடினார்.
பாலத்தில் இருந்து கார் பறந்து வந்து தண்டவாளத்தில் விழுந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச்சென்று காரை நிமிர்த்தி காரில் சிக்கி உயிருக்கு போராடிய திவாகரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
காலில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திவாகர் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக கார் விழுந்தபோது அந்த வழியாக மின்சார ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தாம்பரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications