சென்னை – அரைகுறை பாலத்திலிருந்து பறந்து ரயில்வே டிராக்கில் விழுந்த கார்!
சென்னை: அரைகுறையாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது சென்ற கார், 50 அடி உயரத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.
சென்னை, பல்லாவரம் பழைய ஜிஎஸ்டி சாலையில் இருந்து பழைய பல்லாவரம் செல்வதற்காக, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சாலையை ஒட்டியுள்ள மேம்பால பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையும், தண்டவாளத்தின் மேலை வரக்கூடிய பகுதியை ரயில்வே துறையும் கட்டுவதாக ஒப்பந்தம்.
நெடுஞ்சாலைத்துறை தனது பங்கு வேலைகளை முடித்துவிட்டது. ரயில்வே தனது பணிகளை இன்னும் துவக்கவில்லை.
அதாவது, தண்டவாளத்தின் இரண்டு பக்கதில் இருந்தும் மேம்பால பாதை எழுப்பப்பட்டு விட்டது. ஆனால், தண்டவாளத்தின் மத்தியில் இரண்டு பாதையும் இணைக்கப்படாமல் உள்ளது.
பாலம் அரைகுறையாக பாதியில் நிற்பது பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தெரியும். பாலத்திற்காக போடப்பட்ட சாலையில் இருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பில்லை.
தினசரி அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இந்த நிலவரம் தெரியும்.
ஆனால், நிலைமை தெரியாத வாகனஓட்டிகளை கவனத்தில் கொண்டு இந்தப்பாதை முற்றிலும் மூடப்பட்டிருக்க வேண்டும். அல்லது எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் நிர்வாகத்தினர் செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி சாலையில் இருந்து பழைய பல்லாவரத்துக்கு செல்ல திட்டமிட்டு, இந்த பாலத்தில் ஏறிய கார் ஒன்று தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த திவாகர் என்ற 30 வயது இளைஞர் இந்த காரை ஓட்டி வந்துள்ளார். பாலம் அரைகுறையாக நிற்பது அவருக்கு தெரியவில்லை.
வேல்ஸ் கல்லூரிக்கச் செல்வதற்காக படு வேகமாக காரை ஓட்டிச் சென்ற அவர் பாலத்தின் நடுப்பகுதி அருகே சென்ற போது தான், பாலம் பாதியில் நிற்பதை பார்த்தார். அதிர்ச்சி அடைந்த திவாகர் திடீர் பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சி செய்தார்.
அதற்குள் 50 அடி உயர பாலத்தில் இருந்து கார், சினிமாவில் வருவதை போல பறந்து வந்து தண்டவாளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்து நொறுங்கியது. காரின் உள்ளே சிக்கிக்கொண்ட திவாகர் உயிருக்கு போராடினார்.
பாலத்தில் இருந்து கார் பறந்து வந்து தண்டவாளத்தில் விழுந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச்சென்று காரை நிமிர்த்தி காரில் சிக்கி உயிருக்கு போராடிய திவாகரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
காலில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திவாகர் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக கார் விழுந்தபோது அந்த வழியாக மின்சார ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தாம்பரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications