பாகிஸ்தானின் நிலையற்ற போக்கால் இந்தியாவுக்கு பெரும் செலவு - ப.சிதம்பரம்
புதுச்சேரி: பாகிஸ்தானின் நிலையற்ற போக்கு காரணமாகவே பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலவிட வேண்டியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 125 ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், 'நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான், நட்பு முறையில் பழகும் அமைதியான, நிலையான அரசியல் போக்கு கொண்டதாக இருந்திருந்தால், இந்தியாவின் ராணுவ செலவினங்கள் பெருமளவு குறையும்.
ஆனால் தவிர்க்க முடியாத வகையிலும், மிகுந்த பாதுகாப்பு தேவையின் அடிப்படையிலும் இந்தியா ராணுவத்துக்காக ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
உள்நாட்டு பாதுகாப்புக்காக மட்டும் நடப்பு பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தே ஆக வேண்டியுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications