சாமியார் கிளப்பிய வெடிகுண்டு பீதி - அவசரமாக தரையிறங்கிய விமானம்
வாரனாசி: குண்டு வெடிக்கும் என சாமியார் கிளப்பிய பீதியால் ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து வாரனாசி- கஜூரோஹோ செல்லும் ஜெட் ஏர்வேஸின் 737-9w723 விமானம் நேற்று டெல்லி விமான நிலையத்தில் புறப்பட்டது.
114 பயணிகளுடன் இந்த விமானம் கஜூராஹோ நோக்கி புறப்பட்டது. விமானத்தில் விஆர்கே சிங் என்ற சாமியார் பயணம் செய்துகொண்டிருந்தார்.
52 வயதான விஆர்கே சிங் பெரிய தாடி, சடா முடியுடன் காவி உடையுடன் இருந்தார்.
அப்போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு தம்பதிகளுடன் சாமியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
'சலசலவென பேசாமல் அமைதியாக இருங்கள். இல்லை என்றால் 'குண்டு' வெடித்துவிடும்' என ஒருகட்டத்தில் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு தம்பதி விமான ஊழியர்களிடம் பதற்றத்தோடு புகார் தெரிவித்துவிட்டனர்.
உடனடியாக விமானம் வாரனாசியில் தரையிறக்கப்பட்டு கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது.
சாமியாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்த போது, 'அமைதியாக இருங்கள் என்று தான் சொன்னேன். வெடிகுண்டு பற்றி எதுவும் கூறவில்லை' என்றிருக்கிறார்.
பின்னர், வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, நான்கு மணி நேரம் தாமதமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் கஜூராஹோ புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications