திருநங்கைக்கான மிஸ் இந்தியா போட்டி: கேரளா அரவாணிக்கு பட்டம்
சேலம்: திருநங்கைகளுக்கான அழகிகள் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த அரவாணி மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.
மிஸ் இந்தியா அரவாணி போட்டி சேலத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட அரவாணிகள் மற்றும் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு தாய் விழுதுகள் கூட்டமைப்பினர் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியாக 2010ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அரவாணி அழகிப் போட்டி நடந்தது.
இதில் 19 அரவாணிகள் கலந்துகொண்டனர். புறத்தோற்றம், புத்திக் கூர்மை, பேச்சு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மிஸ் அழகி அரவாணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் கேரளாவைச் சேர்ந்த சபீதா என்ற 23 வயது அரவாணி 2010ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அரவாணியாக வெற்றிபெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சேலத்தைச் சேர்ந்த மணிமேகலாவும், மூன்றாவது இடத்தை பெங்களூரைச் சேர்ந்த அரவாணி ரம்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications