மே 29 வரை விசை படகுகளுக்கு தடை: தமிழகத்தில் மீன் விலை உயரும்
சென்னை: நாளை இரவு முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க விசைப் படகுகளுக்கு தடை அமலாவதால் தமிழகத்தில் மீன் விலை மிகக் கடுமையாக உயரவுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை, 45 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த நாட்களில், ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த காலக்கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசை படகுகளுக்கு அனுமதி இல்லை. கடலில் குறைந்த தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் மற்றும் கட்டுமரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இந்த ஆண்டு மீன்பிடி தடை நாளை (புதன்கிழமை) இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மே மாதம் 29ம் தேதி வரை தமிழகத்தில் சுமார் 10,000 விசை படகுகள் கடலுக்குள் செல்லாது.
இதனால் தமிழகத்தில் மீன் வரத்து 85 சதவீதம் குறையவுள்ளத. இதனால், மீன் விலை மிகக் கடுமையாக உயரவுள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் மீன் விலை 40 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மீன் தேவையை சமாளிக்க கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்படவுள்ளன.
மீன்பிடி தடை காலத்தில், தமிழக விசை படகு மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறுகையில், கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் மீன்பிடி தடை காலத்தில் ரூ.500 நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதுவும் மீனவ குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கொடுக்கப்பட்டது. புதுச்சேரியில் இந்த ஆண்டு மீனவர்களுக்கு ரூ.2,700 நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதுபோல், தமிழகத்திலும் நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications