மகளிர் மசோதாவை நிறைவேற்ற ஜெயலலிதா வலியுறுத்தல்
சென்னை: வரும் மக்களவை கூட்டத்தொடரிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து கடந்த பதினைந்து ஆண்டு காலமாக பேசப்பட்டு வந்தாலும், 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை துவக்கியபோது உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே, நாடாளுமன்ற, சட்டப்பேரவை அமைப்புகளில் குறைந்தது 25 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு வழங்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்ற பின்னர் அதிமுக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
1991ல் முதன் முதலாக நான் ஆட்சி அமைத்த போது தான், 31 பெண் எம்எல்ஏக்கள் என்னுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர, நியமன உறுப்பினராகவும் ஒரு பெண்ணே நியமிக்கப்பட்டார். அதாவது கிட்டத்தட்ட 15 சதவீதப் பெண்கள் சட்டப்பேரவைக்கு 1991ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அதிமுக தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறது. இந்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலமாகியும், சில தடைக்கற்கள் காரணமாக இன்னமும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை.
இதன் விளைவாக மீண்டும் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் வருகின்ற மக்களவைக் கூட்டத் தொடரிலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
நம் நாட்டு மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காடு அளவுக்கு பெண்கள் இருக்கும்போது அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது என்பதை அனைத்துக் கட்சியினரும் உணர்ந்து, பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம்:
இந் நிலையில் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த மத்திய அரசு மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி அகர்தலாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த மசோதா வரும் கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.
நாடாளுமன்றத்தின் 2வது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 15 முதல் மீண்டும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications