தமிழகத்தில் 12 ஊர்களில் '100 டிகிரி பிளஸ்' வெயில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரி்த்து வருகிறது.
கடும் வெயிலுக்கு ஒரிஸ்ஸாவில் இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நேற்று மட்டும் 5 பேர் பலியாயினர்.
தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.
வேலூர், திருத்தணி, திருநெல்வேலியில் 106 டிகிரி வெயில் பதிவானது.
மதுரை, சேலம், திருச்சியில் 104 டிகிரியும், சென்னை, கடலூர், தருமபுரி, தஞ்சாவூரில் 102 டிகிரியும், காரைக்கால், நாகப்பட்டினத்தில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
கோவை, புதுச்சேரியில் 99 டிகிரியும், கன்னியாகுமரி, தூத்துக்குடியில் 93 டிகிரியும் வெயில் பதிவானது.
பெங்களூரில் நேற்று நல்ல மழை பெய்ததால் வெயிலின் கொடுமை சற்று குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications