சாலையில் வீசப்பட்ட குழந்தை - சித்திரையில் பிறந்தது காரணமா?
மதுரை: மதுரை திருநகரில் உள்ள சித்திரகலா மினி காலனி சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று வீசப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனடியாக போலீசார் சென்று அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று அதிகாலையில் தொப்புள் கொடியோடு காணப்பட்ட அந்த குழந்தை, அப்போது தான் பிறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது மதுரை கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அந்த குழந்தையை சாலையில் வீசியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சித்திரை முதல் நாளில் பிறக்கும் குழந்தையால், குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும் என்கிற பேச்சு கிராமப்பகுதிகளில் உண்டு.
இதன் காரணமாகவே குழந்தை தூக்கி வீசப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது.
இல்லையெனில் தவறான நடத்தையின் மூலம் பிறந்ததால், குழந்தை வீசப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications