தொடர் கொள்ளை- நெல்லையில் நேபாள வாலிபர் கைது
நெல்லை: நெல்லையில் நடந்து வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய நேபாள வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை நடந்து வருகின்றன. பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் கடைகளை கண்காணித்து நகை, பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகர், சாந்தி நகர், பெருமாள்புரம், ஐகிரவுண்ட் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது.
தியாகராஜ நகரில் வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டை உடைத்து 18 பவுன் நகையை கொள்ளையடித்தனர். தச்சநல்லூர் நல்மேய்ப்பார் நகரில் கடற்படை அதிகாரி வீட்டில் பட்டப்பகலில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார்சிஹ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் நிஜாமூதின், மேற்பார்வையில் உதவி க்மிஷனர் பரமானந்தம், இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை அன்புநகர் என்எச் காலனி பகுதியில் நேற்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரத கையில் கடப்பாரை மற்றும் உடைக்கப்பட்ட பூட்டு, ரூ,5 ஆயிரம் ஆகியவை இருந்தது. விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த கோபால்ஜி என்பது தெரிய வந்தது. என்எச் காலனி 4வது குறுக்கு தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமலிங்கம் என்பவரது வீ்ட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை அவர் திருடியிருப்பது தெரிய வந்தது.
பிரபல கொள்ளையரான இவர் மீது தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நெல்லை மாநகரிலும் தனது கூட்டாளிகளுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
போலீசாரை கண்டதும் கோபால்ஜியின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோபால்ஜியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கூர்க்கா வேலைக்காக தமிழகத்திற்கு வரும் இவர்கள் பின்னர் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து விட்டு மீண்டும் நோபாளத்திற்கு சென்று விடுகின்றனர். இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications