தான்டேவாடா படுகொலை: விசாரணைக் குழுத் தலைவரின் பாதுகாவலர் மீது தாக்குதல்
ராய்ப்பூர்: தான்டாவாடா படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ராம் மோகனின் பாதுகாவலர் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏப்ரல் 6ம் தேதி சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா வனப்பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் மீது நக்சலைட்டுகள் கொடூரத் தாக்குதல் நடத்தி 76 பேரைக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராம் மோகன் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக ராம் மோகன் தான்டேவாடா மாவட்டத்தில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று ராம் மோகனின் பாதுகாவலர்களை நக்சலைட்டுகள் தாக்கியுள்ளனர். சிஆர்பிஎப் போலீஸாரின் சீருடையில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராம் மோகன் பாதுகாவலர்கள் மீது நக்சலைட்டுகள் சில சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாவலர்களும் சுட்டனர். இந்த சண்டையில் உயிர்ப்பலி ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது ஆதிக்கம் இன்னும் இருப்பதைக் காட்டும் வகையில் இந்தத் தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராம் மோகனுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications