சாய்ந்து வரும் வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் விரிசல்
கோவை: கோவை அம்மன்குளத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டம் சாய்ந்து வரும் நிலையில் தற்போது கட்ட்டத்தில் விரிசலும் விட்டுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 936 வீடுகளைக் கொண்ட 2 கட்ட்டங்கள் மண்ணில் புதைந்து சாய ஆரம்பித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தக் கட்டடங்களை அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டடம் மேலும் சாயாமல் தடுக்க இரும்புக் குழாய்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டது. அந்தக் கட்டடங்களை இடிக்கும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், அந்த கட்டிடத்திற்கு எதிர்புறம் உள்ள கட்டிடத்தில் நடுவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டிடம் ஒரு பக்கம் சாய்ந்து இருப்பதால், இந்த விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.