மன்மோகன் சிங்கை சந்தித்தார் தரூர் – ஐபிஎல் சர்ச்சை குறித்து விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Sashi Tharoor
டெல்லி: ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

இதையடுத்து இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் தரூர் மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள தரூருக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொடி உயர்த்தியுள்ளன.

தொடர்ந்து அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தபோதிலும் அவரை மன்னித்து விட்டு விட்ட சோனியாவும், பிரதமரும், இந்த முறையும் அப்படியே நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தரப்பிலேயே கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் பிரதமரைச் சந்தித்தார் தரூர். அவரிடம் ஐபிஎல் கொச்ச அணி சர்ச்சை குறித்து விரிவாக விளக்கினார். தனது தரப்பு நியாயத்தையும் எடுத்து வைத்த்தாகத் தெரிகிறது.

பிரதமருடன் தரூர் நடத்திய சந்திப்பின்போது மூத்த அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் ரெண்டஸ்வஸ் குழுமத்தில் உள்ள தனது பங்குகளை தரூரின் தோழியான சுனந்தா முழுமையாக விட்டுக் கொடுத்து விட வேண்டும். அப்படிச் செய்தால் தரூரின் பதவி தப்பும் என அவருக்கு உறுதிபட தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தரூர் ஒத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

எனவே இந்த முறையும் தரூர் தப்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை ஆறரை மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கியக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர், சோனியா காந்தி கலந்து கொள்கின்றனர். அப்போது தரூர் விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+