விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு சரத் பவார் மட்டும் காரணமல்ல – பாஜக திடீர் பாசம்!
மும்பை: நாட்டை உலுக்கி வரும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை மட்டும் குறை கூற முடியாது என்று திடீரென பவார் மீது பாசத்தைக் காட்டியுள்ளது பாஜக.
மும்பையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில்,
விலைவாசி உயர்வுக்கு பவாரை மட்டும் காரணம் காட்டி காங்கிரஸ் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கூட்டணி அரசும்தான் இதற்குப் பொறுப்பாகும். சாமானிய மக்களின் கடும் பாதிப்புக்கு காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணமாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மோசமான ஆட்சி முறையும், தவறான பொருளாதார கொள்கைகளும்தான் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம்.
விலைவாசி உயர்வுக்கும், அப்பாவி மக்களின் பாதிப்புக்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும், சோனியா காந்தியும், நிதித்துறை, வர்த்தக அமைச்சர்களும்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக பாஜக நடத்தும் நாடு தழுவிய போராட்டத்தில் இடதுசாரிகளும் கலந்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் கத்காரி.












Click it and Unblock the Notifications