பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்!

விஆர்எஸ், மற்றும் தனியார்மயம் ஆகியவற்றை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல், ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
தொலைதொடர்புத் துறையின் 30 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்பது, கேபிள்கள் மற்றும் கட்டுமானங்களை தனியார் துறையினர் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மொத்தமுள்ள மூன்று லட்சம் ஊழியர்களில், ஒரு லட்சம் பேரை, வி.ஆர்.எஸ்., திட்டத்தின் கீழ், ஓய்வு பெற அழைப்பது ஆகிய ஆலோசனைகளை, பிரதமர் உருவாக்கிய சாம் பிட்ரோடா கமிட்டி பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று முதல், தொலைதொடர்பு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் தொலைத் தொடர்பு சேவை பெருமளவு பாதிக்க ஆரம்பித்தது. வட இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் பிற்பகலுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும், தனியார்மயமாக்கல் குறித்து அமைச்சரவைக் குழு பரிசீலித்து முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாபஸ் அறிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications