கூகுள் பாஸ்வேர்டுகளை குறி வைத்த சீன ஹேக்கர்கள்!
நியூயார்க்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கூகுள் சர்வர்கள் மீது சைபர் அட்டாக் நடந்தபோது அதன் அதி ரகசியமான பாஸ்வேர்டுகள் குறி வைக்கப்பட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
கூகுள் பாஸ்வேர்ட் சி்ஸ்டம் மிக ரகசியமானது. குறிப்பிட்ட பாஸ்வேர்டை அதன் ஊழியர்களே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் (Single Sign-On) என்ற அளவுக்கு மிக மிக பாதுகாப்பானது.
'Gaia' என்ற பெயரிலான இந்த அதி ரகசிய பாஸ்வேர்ட் சிஸ்டத்தைத் தான் கடந்த டிசம்பரில் குறி வைத்து தாக்கியுள்ளனர் சீன ஹேக்கர்கள்.
கூகுளின் இ-மெயில் சர்வர்கள், வர்த்தக பரிவர்த்தனைகள் ஆகியவை இந்த 'Gaia' சிஸ்டம் மூலம் தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் சைபர் அட்டாக் நடந்தபோது சீனாவின் இரு மனித உரிமை அமைப்புகளின் இ-மெயில்கள் படிக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் பின்னணியில் சீன அரசே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து கூகுள் வெளியேறியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications