இந்தோனேசியாவில் கப்பலில் தவித்து வந்த 100 ஈழத் தமிழர்கள் தடுப்பு மையங்களுக்கு திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் நிலை கொண்டுள்ள கப்பலை விட்டு வெளியேற மறுத்து வரும் ஈழத் தமிழர்களில் 100க்கும் மேற்பட்டோரை திடீரென தடுப்பு முகாம்களுக்கு மாற்றியுள்ளனர் இந்தோனேசிய அதிகாரிகள்.
சிங்கப்பூர் அருகே ரியாவ் தீவில் ஆஸ்திரேலிய அரசு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு அவர்கள் மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சட்டப்பூர்வமான உதவிகளைப் பெறவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இந்த்த் தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி படகில் போனபோது இந்தோனேசிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு மேரக் தறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அன்று முதல் இவர்கள் கப்பலிலேயே இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications