பார்வதி அம்மாளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கக் கோரி சென்னையில் வழக்கு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய தாயார் பார்வதி அம்மாளை சிறப்பு விமானம் அனுப்பி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவை இன்று சந்தித்து முறையிட்டார் கருப்பன். அப்போது அவரிடம் இதுதொடர்பாக ரிட் மனுவைத் தாக்கல் செய்யமாறு அறிவுறுத்தினார் தலைமை நீதிபதி. இதையடுத்து கருப்பன் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், முறையான விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பார்வதி அம்மாளை எந்தவிதக் காரணமும் இல்லாமல், விமானத்தை விட்டு இறங்கக் கூட அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்ப்ப்பட்டுள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல்.
அவரை சிறப்பு விமானம் அனுப்பி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் கருப்பன்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications