சென்னை, பஞ்சாப், கொல்கத்தாவுடன் போட்டி முடிவுகள் ஃபிக்ஸ் செய்யப்பட்டதா?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கெளரவ் பர்மன், ஐபிஎல் தலைவர் லலித் மோடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் தரம்சாலாவில் கடைசிப் போட்டி நடந்த்து. இதில் வென்றால்தான் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை இருந்தது. அதேசமயம், இப்போட்டியின் முடிவால் பஞ்சாபுக்கு எந்தப் பாதகமோ, சாதகமோ இல்லாத நிலை.
இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டியிலும் கொல்கத்தாவுக்குத்தான் அதிக நெருக்கடி இருந்தது.
இந்த நிலையில் இப்போட்டிகளின் முடிவுகள், சென்னை, கொல்கத்தாவுக்கு சாதகமாக இருப்பது போல மாற்றப்பட்டதாக, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் அணியின் உரிமையாளரான மோஹித் பர்மனின் தம்பி கெளரவ் பர்மனும் இதில் ஒரு உரிமையாளர். இந்த கெளரவ், மோடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் டோணியின் அபார ஆட்டத்தால் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது. அதாவது கடைசி ஓவரில் டோணி அதிரடியாக ஆடி வெற்றி தேடிக் கொடுத்தார். இதுதான் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சென்னை அணி அரை இறுதிக்குள் நுழைய வசதியாக பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்களது தீவிரத்தைக் குறைத்துக கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மேட்ச் பிக்ஸிங் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த செய்திக்கு ஆஸ்திரேலிய வீரரும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனுமான கில்கிறைஸ்ட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications