ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இனி நான் செயல்படுவேன்- எஸ்.வி.சேகர்
திண்டுக்கல்: முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேரவுள்ளேன். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இனி நான் செயல்படுவேன் என்று கூறியுள்ளார் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர்.
திண்டுக்கல் வந்த சேகர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உண்மையான அதிமுக தொண்டர்களை ஜெயலலிதா கட்சியில் இருந்து அனுப்பி விட்டார். மக்களை அந்தக் கட்சித் தலைமை நினைவில் கொள்வதே இல்லை. மக்களையும், தொண்டர்களையும் விட்டு அந்தக் கட்சி வெகுதூரம் சென்று விட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு முதல்வர் கலைஞர் வழிகாட்டுதல்படியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படியும் என்னுடைய அரசியல் எதிர்காலம் அமையும்.
சட்டசமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைவேன்.
அடுத்த நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார் சேகர்.












Click it and Unblock the Notifications