ஹாலந்து: விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய 7 பேர் கைது!

இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த 7 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பல வழிகளில் நிதி திரட்டி வந்தனர். நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தியும், டிவிடிக்கள், கேலண்டர்கள், சட்ட விரோத லாட்டரிகள் விற்றும் நிதி திரட்டி வந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் 16 வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களில் சோதனை நடத்தி இந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களன் கம்ப்யூட்டர்கள், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில முக்கிய ஆவணங்களும் 40,000 யூரோ கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த 7 பேரும் ஹாலந்தில் செயல்பட்டு வரும் தமிழ் ஒருங்கிணைப்பு கமிட்டி, தமிழர் மறுவாழ்வு இயக்கம், தமிழ் இளைஞர் இயக்கம், தமிழ் பெண்கள் இயக்கம், தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்தக் குழுவின் தலைவராக ஹேக் நகரைச் சேர்ந்த 45 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டுக்கான இலங்கை தூதர் கிரேஷ் ஆசீர்வாதன் வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்து உள்பட ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகள் இயக்கத்துக்கு தடை விதி்க்கப்பட்டுள்ளதால், அதற்கு நிதி திரட்டுவது சட்ட விரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications