அதிமுக பெண் எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக அவை காவலர்கள் புகார்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபையை விட்டு வெளியேற்றியபோது அவர்கள் தங்களைத் தாக்கியதாக அவைக் காவலர்கள் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் புகார் தந்துள்ளனர்.
இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன்,
நாடு தழுவிய பந்த் நடந்தபோது, அதிமுக தனது கருத்தை வெளியிட்ட நேரத்தில் அவையை விட்டு வெளியேற்றப்பட்டோம்.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இளமதி சுப்பிரமணியம், பதர் சயீத் போன்ற பெண் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் அத்துமீறி தாக்கப்பட்டனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்கு போலீசார் பாதுகாப்பு தர வேண்டுமே தவிர, சட்டமன்றத்திலேயே இத்தகைய செயல் நடந்தேறியிருப்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஆவுடையப்பன், அவர்கள்தான் தங்களைத் தாக்கியதாக காவலர்கள் என்னிடம் புகார் கொடுத்துள்ளனர். நீங்கள் என் அறைக்கு வாருங்கள். இதுபற்றி அங்கு பேசிக் கொள்ளலாம் என்றார்.
எம்.எல்.ஏ.க்கள் செல்போன் பேசக் கூடாது:
முன்னதாக சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில்,
சட்டசபைக்குள் வரும்போது செல்போன்களை ஆப் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டது. என்றாலும் சில உறுப்பினர்கள் செல்போன் பேசுவதாக அறிகிறேன்.
எனவே உறுப்பினர்களும், அலுவலக பணிக்காக சட்டசபைக்குள் வரும் மற்றவர்களும் தங்கள் செல்போன்களை ஆப் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications