For Daily Alerts
Just In
தமிழக அரசின் கோடைத் திருவிழா- தொடங்கி வைக்கிறார் கருணாநிதி
சென்னை: தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படும் கோடைத் திருவிழாவை முதல்வர் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டு முழுவதும் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை திருவிழா என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி உள்ளோம்.
கோடைக்காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளை குளிர்விக்கும் வகையில் அய்யன் அருவி என்ற பெயரில் செயற்கை அருவி மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் நீர் விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கோடை திருவிழாவை நாளை காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த கோடை திருவிழா 45 நாட்கள் வரை நடைபெறும் என்றார்.
Comments
தமிழக அரசு சுற்றுலாத்துறை சென்னை முதல்வர் கருணாநிதி summer festival tamilnadu govt chennai karunanidhi
Story first published: Thursday, April 29, 2010, 15:03 [IST]