காலாவதி மருந்துகள் தீவைத்து எரிப்பு - மருத்துவ அதிகாரிகள் விசாரணை
நெல்லை: நெல்லையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்து மாத்திரைகள் புதர்களில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
காலாவதி மற்றும் போலி மருந்து, மாத்திரைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து மருந்து கடைகள், குடோன்களில் சோதனை நடத்தினர்.
சோதனைக்கு பயந்து மருந்து கடைக்காரர்கள் தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை ரோட்டோரங்களில் ரகசியமாக கொட்டி அழித்தனர். நெல்லையிலும் பல இடங்களில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் ரோட்டோரங்களிலும், குப்பை தொட்டிகளிலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கொட்டப்பட்டிருந்தன.
நெல்லை மீனாட்சிபுரம் தாமிரபரணி ரயில்வே ஆற்று பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று முட்புதர்களில் மாத்திரைகள், ஊசி மருந்துகள், குழந்தைகளுக்கான டானிக்குள், வைட்டமின் மாத்திரைகள் கொட்டி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
இவை அனைத்தும் காலாவதியானவை ஆகும். இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications