அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – முஷாரப்பின் புதுக் கட்சி
லண்டன்: அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என்ற பெயரில் புதுக் கட்சி தொடங்குகிறார் முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.
இதுதொடர்பாக துபாயில் மே 2ம் தேதி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். 10 நாட்கள் துபாயில் தங்கவுள்ளாராம் முஷாரப். இந்த தங்கலின்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் தனக்கு ஆதரவாக உள்ளவர்களுடன் பேசவுள்ளாராம்.
துபாய் சந்திப்புக்கு முன்னாள் உள்துறை அமைச்சர் பைசல் சலே ஹயாத், முன்னாள் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முகம்மது அலி துரானி ஆகியோர் முக்கியமாக அழைக்கப்பட்டுள்ளனராம்.
முஷாரப்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான வக்கீல் முகம்மது அலி சைப் என்பவர்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.
முஷாரப்பின் புதிய கட்சியான அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் இந்த சைப் பதிவு செய்துள்ளாராம். கட்சித் தலைவராக சைப் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போதைக்கு சைப் தலைமையில் கட்சியை நடத்துவது என்றும், பாகிஸ்தான் திரும்ப உகந்த சூழல்ஏற்படும்போது தானே தலைவராவது என்றும் முஷாரப் திட்டமிட்டுள்ளாராம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார் முஷாரப். அப்போது முதல் லண்டனிலும், துபாயிலுமாக மாறி மாறி வாசம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications