சென்னை பூந்தமல்லி கோர்ட் வாசலில் ரவுடி படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பூந்தமல்லி கோர்ட் வாசலில் வைத்து சென்னையைச் சேர்ந்த ரவுடி படுகொலை செய்யப்பட்டான்.
சாத்தூரில் நேற்றுதான் ஒரு பிரபல ரவுடியை போலீஸார் என்கெளன்டர் மூலம் தீர்த்துக் கட்டினர். இந்த நிலையில் பூந்தமல்லி கோர்ட் வாசலில் வைத்து ஒரு பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டுள்ளான். கூடவே அவனது வக்கீலும் கொலை செய்யப்பட்டார்.
வட சென்னையைச் சேர்ந்தவன் சின்னா என்கிற சின்னகேசவலு. பிரபல ரவுடி. இன்று பூந்தமல்லி கோர்ட்டுக்கு சின்னா வந்திருந்தான். கூடவே அவனது வக்கீலும் வந்திருந்தார்.
அவர்கள் இருவரையும்ஒரு கும்பல் கோர்ட்வாசலில் வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் சின்னாவும், அவனது வக்கீலும் துடிதுடித்து உயரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.












Click it and Unblock the Notifications