இந்திய-இலங்கை மீனவர் நல்லுறவை மேம்படுத்த மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய- இலங்கை மீனவர்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

'இலங்கை-இந்திய மீனவ சமுதாய அடித்தளம்' என்ற அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.

இது தொடர்பாக இந்த அமைப்பின் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி முத்து கூறுகையி்ல்,

இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைக் களையவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கையில் இந்த மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள். கடல் எல்லைகளில் இந்திய- இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளிடமும் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்படும்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதையும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் கைது செய்யப்படுவததையும் தவிர்க்க முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+