சாலைவிபத்து – உயிர் தப்பினார் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷனி
சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மே தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காலையில் காரில் புறப்பட்டார் ரேகா.
கார் திருமகள் பைபாஸ் அருகே சென்று கொண்டு இருந்தது. மேயரின் கார் முன்பு இன்னொரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்ற காரின் டிரைவர் காரை நிறுத்தியுள்ளார்.
இதனால் பின்னால் வந்த மேயரின் கார் பலமாக மோதியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக மேயர் காயமின்றி உயிர் தப்பினார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், தி.மு.க.வினரும் மேயரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். தலையில் ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. பெரிய அளவில் எந்தக் காயமும் இல்லை என்று டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து மேயர் வீடு திரும்பினார்.
விபத்து குறித்து சேலம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.