சென்சஸ் கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர்களும் சேர்க்கப்படுவர் – அரசு
சென்னை: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இலங்கைத் தமிழர்கள், திபெத், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களும் சேர்க்கப்படுவர் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு ஜூன் 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
அடுத்து 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 28ம தேதி வரை நடைபெறவுள்ளது.
முதலில் நடைபெறும் கணக்கெடுப்பின்போது வீட்டில் உள்ள வசதிகள், கழிவு நீர் வசதி, கால்வாய், குடிநீர் வசதி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். அடுத்த கட்டமாக, கல்வித் தகுதி, மதம், அறிந்த மொழிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும்.
இந்த கணக்கெடுப்பின்போது இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திபெத், மியான்மர், வங்கதேசத்திலிருந்து வந்தவர்களையும் கணக்கெடுப்பில் சேர்க்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications