நெல்லை டயர் நிறுவனத்தில் 53 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை அருகே டயர் நிறுவனத்தில் வேலை நிறுத்ததில் ஈடுபட்ட 53 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் நிறுவனம் உள்ளது. இங்கு 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சில தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவி்ல்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 53 தொழிலாளர்களை நிர்வாகம் திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் நிறுவனம் முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாழைத்து டிஎஸ்பி ராஜராஜன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.