திண்டிவனத்தில் சாப்பிட ஹோட்டலுக்கு வந்தவர் படுகொலை- பதட்டம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஹோட்டலில் சாப்பிட வந்தவர் அடித்துக் கொல்லப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்த ரமணா என்பவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட வந்தார். அப்போது அவருக்கும், ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல் உரிமையாளர் ரமணாவை கடுமையாக தாக்கியதில் அஏவர் படுகாயமடைந்து விழுந்தார்.
உடனடியாக அவரை புதுச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரமணா உயிரிழந்தார். இதையடுத்து திண்டிவனத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications