For Daily Alerts
Just In
காசி- சென்னை எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
சென்னை: காசியில் (வாரணாசி) இருந்து சென்னை வரை இயக்கப்பட்டு வரும் வாரந்திரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது ரயில் இன்று முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று இரவு 9.15 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண்-4260) நாக்பூர், பல்லார்ஷா வழியாக செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். புதன் கிழமை அதிகாலை 1.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து இந்த ரயில் (எண்-4259) புதன்கிழமை இரவு 10.40 மணிக்குப் புறப்படும்.
மறுநாள் (வியாழக்கிழமை) பிற்பகல் 12.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வாரணாசியை சென்றடையும்.
Story first published: Monday, May 3, 2010, 13:23 [IST]