குளச்சல் கடலில் திடீர் சீற்றம் – மீனவர்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடலில் திடீரென சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் பீதியடைந்து கடலுக்குச் செல்லவில்லை.
குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள். 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் வள்ளங்கள் உள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் குளச்சலில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் மணல் பரப்பை தாண்டி விழுகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications