படம் பிடிக்க ப.சிதம்பரம் கெடுபிடி –புறக்கணித்த மதுரை பத்திரிக்கையாளர்கள்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருடன் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க கெடுபிடியுடன் நடந்ததால் ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்கள் சிதம்பரத்தை புறக்கணித்தனர்.
சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஜியோ தலைமையிலான அந்நாட்டுக் குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இன்று காலையில் சிங்கப்பூர் அமைச்சரும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் தயாராக இருந்தனர். சிங்கப்பூர் அமைச்சர் உள்ளிடோர் கோவிலுக்குள் வரும்போது படம் பிடித்தனர்.
அப்போது அமைச்சர் ப.சிதம்பரம், யாரும் உள்ளே வரவேண்டாம் என பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக்கூறினார்.இதனால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். புகைப்படக்காரர்கள் யாரும் படம் எடுக்க வேண்டாம் என அவர் வரும் வரை மவுனமாக இருந்து தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.
இதைப் பார்த்த ப.சிதம்பரம், கோவிலுக்குள் போய் விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களைப் பார்த்து முறைத்தபடி சென்றார்.
ப.சிதம்பரம் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. பத்திரிக்கையாளர்களும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.












Click it and Unblock the Notifications