விலை வாசி உயர்வால் மன அழுத்தம் - ஷீலா தீட்சித்துக்கு மிரட்டல் விடுத்த டெல்லி பெண்
Subscribe to Oneindia Tamil

ஞாயிற்றுக்கிழமை ஷீலா தீட்சித்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி போலீஸுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் 60 வயது மூதாட்டி ஒருவர்தான் இந்த தொலைபேசி மிரட்டலை விடுத்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், விலைவாசி உயர்வால் பெரும் மன வேதனையில் தள்ளப்பட்ட அப்பெண், மன அழுத்தத்தால் கடும் பாதிப்படைந்தார்.
இந்த வேதனையிலும், அரசின் மீதான கோபத்திலும்தான் அவர் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமாறு முதல்வர் ஷீலா தீட்சித் கேட்டுக் கொண்டதால், போலீஸார் அவரை விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications