மாஜி மந்திரி செக்ஸ் ஹாலப்பாவுக்கும் நெஞ்சு வலி வந்திருச்சு!

தனது நண்பர் வெங்கடேச மூர்த்தியின் வீட்டில் தங்கியிருந்தபோது அவரது மனைவி சந்திரவதியை பலாத்காரம் செய்தார் ஹாலப்பா. இது குறித்து தகவல் வெளியானதையடு்த்து தலைமறைவானார்.
இந் நிலையில் நேற்று மாவட்ட எஸ்பியிடம் சரணடைந்த அவர் கைது செய்யப்பட்ட அவர் சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 'பிராடு' அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் கைது செய்யப்பட்டவுடன் வரும் 'நெஞ்சு வலி' இவருக்கும் வந்துவிட்டது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.
மிரட்டலால் வீட்டை காலி செய்த தம்பதி:
இந் நிலையில் வெங்கடேச மூர்த்தி-சந்திரவதிக்கு ஹாலப்பாவின் ஆட்களால் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் தங்கது வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications