உள்துறை அமைச்சகம் குறித்து கருத்து: ஜெய்ராம் ரமேஷை கடிந்து கொண்ட பிரதமர்!
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் சீனா சென்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவி்ல் சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் மிரட்சியுடன் நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.
இதனால் எரிச்சலைடைந்த பிரதமர் மன்மோகன் சி்ங், ஜெய்ராம் ரமேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் பேசி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர்கள் மற்ற அமைச்சகங்கள், அமைச்சர்கள் பற்றி குறைகூறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஜீரணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் சீனாவின் ஹூவேய் தொலைத் தொடர்பு நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு சில கருவிகளை இறக்குமதி செய்ய முயன்றபோது அதை மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்துவி்ட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications