செம்மொழி மாநாட்டுக்குப் பின் முன் கூட்டியே சட்டசபைத் தேர்தல்?

தமிழக சட்டப் பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் தான் முடிவடைகிறது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்த முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.
இந் நிலையில் வரும் 30ம் தேதி நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாராகிறது தேர்தல் ஆணையம்:
இந் நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும் இப்போதே தயாராக ஆரம்பித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான சில முன்னேற்பாட்டுப் பணிகளை இப்போதே தொடங்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நரேஷ் குப்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங் ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வாக்குப்பதிவை ஆன்-லைனில் நேரடியாக ஒளிபரப்பத் தேவையான லேப்- டாப்கள், பிராட்பேண்ட்
வசதிகளை தயார் செய்யுமாறும், இதற்கத் தேவைப்படும் லேப்டாப்கள், வெப் கேமராக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறும் குப்தா உத்தரவிட்டார்.
அதே போல வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரிபார்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications