சிபிஎம்மின் வன்முறை அரசியலுக்கு இளைஞர் காங்.கிரஸினர் பலியாகி விடக் கூடாது- ராகுல் காந்தி
காசர்கோடு: கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறை அரசியலைக் கையாண்டு வருகின்றனர். இதனால் தூண்டப்பட்டு பதிலடி நடவடிக்கைகளில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு விடாமல் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு வந்த ராகுல் காந்தி அங்கு வட மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்துப் பேசினார். அப்போதுஅவர் கூறுகையில், கேரளாவில் சட்டசபைத் தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் வரவுள்ளது.
இந்த சமயத்தில், வன்முறை அரசியலை கையாண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை அதில் சிக்க வைத்து கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சிபிஎம் முயலுகிறது. இதில் சிக்கி விடாமல் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உடனடியாக தனது வன்முறை அரசியலை சிபிஎம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பழைய பாணி வன்முறை அரசியலை பயன்படுத்தி லாபம் காண முயல வேண்டாம் என அக்கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய கொள்கைகள், காலம் கடந்தவை. மாறி வரும் காலத்திற்கு சற்றும் பொருந்தாதவை என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications