ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்துக்கு ரூ.420 கோடி
டெல்லி: தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.420 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு 75 சதவீத செலவை மத்திய அரசு தருகிறது. மீதமுள்ள 25 சதவீத தொகை மாநில அரசின் பங்காகும்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி உரிய முறையில் செயல்படுத்தப்பட்ட பிறகு 2வது தவணை நிதியை மத்திய அரசு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியின் மூலம் 2010-11ம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன.
பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ4.75 கோடி:
இந் நிலையில் தமிழகத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப் பராமரிக்க ரூ. 4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆண்டுதோறும் பராமரிப்பு திட்டம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் 2009-10ம் ஆண்டில் 24 பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ரூ. 4.75 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications