மதுரையில் 30 'தமிழ்ப் புலிகள்' கைது
மதுரை: மதுரையில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது செங்கப்படை, மாவிலிப்பட்டி, பெரிய ஆலங்குளம் போன்ற பகுதிகளில் தலித் மக்கள் மீது குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது உரிய நவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்ப் புலிகள் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.
இதனால் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள எஸ்பி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அப்போது தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கிழக்கு சித்திரை வீதி வழியாக எஸ்பி அலுவலகம் நோக்கி வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications