சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் கவுன்சிலுக்கு 35 ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil

யார் யார் இந்தக் கவுன்சிலின் உறுப்பினர்கள் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் கவுன்சிலின் ஊழியர் எண்ணிக்கைக்கு பிரதமர் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஊழியர் குழுவில் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரும் இடம் பெறவுள்ளார்.
மத்தியஅரசின் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்கும் பணியில், ஆளும் கூட்டணிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக இந்த ஆலோசனைக் குழு செயல்படும்.
வருடத்திற்கு இந்த கவுன்சிலுக்காக ரூ. 33 லட்சம் செலவிடப்படவுள்ளதாம். பிரதமர் அலுவலக நிதியிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்படும்.












Click it and Unblock the Notifications