தமிழகத்தில் ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில்அதிரடி மாற்றம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் அதிரடியாக மாற்றப்படவுள்ளனராம்.
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து அதே பொறுப்புகளில் நீண்ட காலமாக உள்ளனர். சில முக்கிய அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிரடிமாற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாம்.
இந்த மாற்றத்தின்போது ஐபிஎஸ் அதிகாரிகள் அளவில் பெரும் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது. முக்கிய இடங்களில் துடிப்பான இளம் அதிகாரிகள் நியமிக்கப்படக் கூடும்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் இந்த அதிரடி மாற்றங்களை அரசு அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications