பிளஸ் டூ-தமிழில் ராசிபுரம் மாணவி மோனிஷா முதலிடம்
சென்னை: பிளஸ்டூ தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி.மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார். இவர் தமிழில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக உயர்ந்துள்ளார்.
ஆங்கிலத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் வெங்கடேஷ் 196 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இயற்பியலில் தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
இதுதவிர வேதியியல் பாடத்திலும் பாண்டியன் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தினேஷ், உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண












Click it and Unblock the Notifications