காஸ் மீதமிருந்தால் அனில் அம்பானி நிறுவனத்திற்கும் தருவோம் - பிரணாப் முகர்ஜி

Subscribe to Oneindia Tamil

Pranab
டெல்லி: இயற்கை எரிவாயுவை வழங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு வழங்கியது போக மீதமிருந்தால் அவற்றை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் கேஸ் லிமிட்டெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தருவது குறித்து பரிசீலிப்போம் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு தருவது குறித்து யோசிக்க முடியும். காஸ் மீதமிருந்தால் இவர்களுக்குத் தருவது குறித்து யோசிக்கலாம்.

ஏற்கனவே எடுத்த முடிவுகளை நாங்கள் திரும்பப் பெற முடியாது. அதை மதிக்க வேண்டும என்றார் பிரணாப்.

சமீபத்தில்தான் கிருஷ்ணா கோதாவரி வடிநிலப் பகுதியில் எடுக்கப்படும் காஸ் தொடர்பான வழக்கில் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+