Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசுதேவநல்லூர் மாணவி திருப்பூரில் மீட்பு

Subscribe to Oneindia Tamil

புளியங்குடி: வீட்டை விட்டு ஓடி போன மாணவியை வாசுதேவநல்லூர் போலீசார் திருப்பூரில் வைத்து மீட்டனர்.

வாசுதேவநல்லூர் குட்டையன் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் பாலசுந்தரி. அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நடந்து முடிந்த ஆண்டு தேர்வில தோல்வியைடந்தார். இதனால் மனமுடைந்த பாலசுந்தரி கடந்த 6ம் தேதி கோச்சிங் கிளாஸ் செல்வதாக கூறி விட்டு அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்று அவரிடம் 200 ரூபாய் தந்தை வாங்கி வர சொன்னதாக கூறி வாங்கி சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பாலசுந்தரியை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பனியன் கம்பெனி ஊழியர்கள் திண்டுக்கல் மாவட்டம் தத்த்தத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ரமேஷ், மணப்பாறை முனியப்பன் மகன் வீரமணி, வடமதுரை காமாட்சி மகன் கணேசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் மாணவியை மீட்டு வாசுதேவநல்லூருக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை அங்குள்ள காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தார். பின்னர் மாணவி பாலசுந்தரியிடம் அறிவுரை கூறி அவர்களிடம் ஓப்படைத்தனர். மாணவியை மீட்ட 4 இளைஞர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+