பட்டு, தேனீ வளர்ப்பு - முதல் 3 இடங்களைப் பிடித்த கடையநல்லூர் மாணவர்கள்
கடையநல்லூர்: பிளஸ்டூவில், பட்டு புழு மற்றும் தேனீ வளர்த்தல் பாடப்பிரிவில் முதல் 3 இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்டூ வில் பட்டு புழு, தேனீ வளர்த்தல் பாடப்பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சொக்கம்பட்டி விவசாயி பிள்ளையார் பாண்டியன்-அன்னத்தாய் தம்பதி மகன் பன்னீர்செல்வம் 600க்கு 596 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடமும், கடையநல்லூர் நகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் மாரியப்பன்-மூக்கம்மாள் தம்பதியின் மகன் முத்துமணி 584 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமும், கடையநல்லூர் விவசாயி தர்மராஜ்-புஷ்பம் தம்பதியனரின் மகன் பிரபு 583 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3ம் இடமும் பெற்றுள்ளான்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையிலும் சாதனை படைத்த இவர்களை பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications